தர்மபுரி: தர்மபுரி-சேலம் மெயின்ரோட்டில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி முன், தமிழக அரசின் முத்திரை பொறிக்கப்பட்ட போலீஸ் தொப்பி ஒன்று சாலையில் கிடந்தது. அதன் மீது அவ்வழியே சென்ற வாகனங்கள் ஏறி சென்றன. அத்தனை வாகனங்கள் ஏறி சென்ற போதிலும் தொப்பில் இருந்த அரசு முத்திரை மட்டும் சேதமடையாமல் இருந்தது. இதனை பார்த்த அவ்வழியே வந்த நபர் ஒருவர் தொப்பியை எடுத்து சாலையில் அருகில் இருந்த ஒரு கல் மீது வைத்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த சாலையில் நேற்று மாலை டூவீலரில் போலீஸ்காரர் ஒருவர் சென்றார்.