வேளச்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்தாலப்பாக்கம் ஊராட்சியை சான்சத் ஆதர்ஷ் கிராம யோஜனா திட்டத்தின் கீழ், முன்மாதிரி கிராமமாக்க, தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தேர்வு செய்துள்ளார். இதற்கான தொடக்க விழா மற்றும் ஆலோசனை கூட்டம் சித்தாலப்பாக்கம் ஊராட்சி சமூக நலக்கூடத்தில் நடந்தது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் தலைமை வகித்தார். தென் சென்னை எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர். பின்னர், முன்மாதிரி கிராமமாக்க தேர்வு செய்யப்பட்ட பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் சித்தாலப்பாக்கம் ஊராட்சியை முன்மாதிரி கிராமமாக்க தேர்வு: தென் சென்னை எம்.பி தத்தெடுத்தார்
- சீதலப்பாக்கம் பஞ்சாயத்து
- செங்கல்பட்டு மாவட்டம்
- மாதிரி கிராமம்
- தெற்கு சென்னை எம்.பி.
- தென் சென்னை
- மாவட்டம்
- Chittalappakkam