சென்னை: தமிழக அரசின் மீன்வளத்துறை மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் தொழில்நுட்ப முறையை கேரளாவில் அறிமுகப்படுத்த உள்ளோம் என்று கேரள மீன்வள துறை அமைச்சர் கூறினார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் தமிழக அரசின் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் கேரள அரசின் மீன்வளத்துறை அமைச்சர் மெர்சி குட்டியம்மா ஆகியோர் நேற்று சந்தித்து பேசினர். பின்னர் கேரள மீன்வளத்துறை அமைச்சர் மெர்சி குட்டியம்மா நிருபர்களிடம் கூறும்போது, “தமிழக அரசு மீன்வள துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் சிறப்பாக உள்ளது.