நெல்லை: நெல்லை கொக்கிரகுளம் புதிய பாலத்தில் இன்று வாகனங்கள் வெள்ளோட்டம் நடந்தது. நெல்லை மாநகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தின் அருகில் கூடுதலாக மற்றொரு பாலம் கட்டும் பணி நடந்து வந்தது. இதேபோல் அருகே உள்ள பலாப்பழம் ஓடை அருகிலும் மற்றொரு சிறிய பாலம் கட்டப்பட்டு வந்தது. மேலும் இதனை இணைக்கும் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.
இந்நிலையில் இந்த இரு பாலங்கள் வழியாக வெள்ளோட்டமாக இன்று போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது.