சின்னசேலம் :சின்ன சேலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஈசாந்தை ஊராட்சியில் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா காந்தி நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் சுமார் 20 தொகுப்பு வீடுகள் கட்டி தந்துள்ளனர். நாளடைவில் தொகுப்பு வீடு கட்டிய ஒரு சிலர் தங்கள் வீடுகளை புதுப்பித்து பெரிதாக கட்டிக்கொண்டதாக தெரிகிறது. இன்னும் சுமார் 10 வீடுகளில் ஏழை, எளிய மக்கள் குடியிருந்து வருகின்றனர்.