சென்னை: அரசு பாலிடெக்னிக் கல்லூரில் விரிவுரையாளர் பணி இடங்களுக்கு பிப்ரவரி 12 வரை விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தேர்வு அட்டவணை இறுதி நிலையில் இருப்பதால் அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்துடன் சான்றிதழ்களின் உண்மை நகல்களை அவசியம் பதிவேற்ற வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.