சென்னை: உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் டாஸ்மாக் கடைகளை முறைப்படுத்துவது குறித்து தமிழக அரசு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார். தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளினால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அரசியல் அமைப்பு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் கிராம பஞ்சாயத்து தலைவர் தீர்மானம் நிறைவேற்றியதை ஏற்று, தமிழக அரசு சட்டம் கொண்டுவர உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதை தேமுதிக சார்பில் வரவேற்கிறோம்.