புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே 100 அடி ஆழ கிணற்றில் விழுந்த ஜல்லிக்கட்டு காளையை தீயணைப்பு துறையினர் போராடி உயிருடன் மீட்டனர். அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோனார். இவருக்கு புதூர் ஆதம்பட்டி காலனி அருகே வயல் தோட்டம் உள்ளது. அங்கு பசு மாடு, ஜல்லிட்டுகளை, ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை மேய்ச்சலுக்காக ஜல்லிக்கட்டு காளை தோட்டத்தில் அவிழ்த்து விட்டிருந்தார். அப்போது அவரது தோட்டத்தில் இருந்த 100அடி ஆழமுள்ள வயல் கிணற்றுக்குள் எதிர்பாராதவிதமாக ஜல்லிக்கட்டுகாளை கால்தவறி விழுந்து விட்டது.
