சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை தினங்களில் மெட்ரோ ரயிலில் 7.35 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இதுகுறித்து மெட்ரோ ரயில்வே அதிகாரி கூறியதாவது: சென்னையில் வழக் கமான நாட்களில் 60 முதல் 70 ஆயிரம் பேர் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துவார்கள். ஆனால், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 13ம் தேதி 1,21,856 பேரும், 14ம் தேதி 1,25,424 பேரும், 15ம் தேதி (பொங்கல் பண்டிகை) 72,845 பேரும், 16ம் தேதி 95,379 பேரும் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தியுள்ளனர்.