மதுரை: காங்கிரஸ் பேச்சாளர் நெல்லை கண்ணன் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக்கோரி நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாநாடு நடந்தது. அதில் கலந்து கொண்டு நான் பேசினேன். அப்போது பிரதமர் மோடி, பாஜ தலைவர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக பாஜகவினர் பல இடங்களில் புகார் அளித்தனர். இதன்பேரில் நெல்லை மேலப்பாளையம் போலீசார் என் மீது வழக்குப்பதிந்துள்ளனர்.