கொல்கத்தா: தேசிய மக்கள் பதிவேடு என்பது ஆபத்தான விளையாட்டு போன்றது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார். அதற்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களும் நடத்தி வருகின்றார். மற்றவர்கள் நடத்தும் போராட்டங்களிலும் கலந்து கொண்டு ஆதரவும் தெரிவித்து வருகின்றார். அடுத்த 4 நாட்களுக்கு மாநிலத்தின் வடக்கு பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை முதல்வர் மம்தா தலைமையேற்று நடத்துகிறார். இதற்காக அவர் நேற்று சிலிகுரி புறப்பட்டு சென்றார். முன்னதாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மம்தா பானர்ஜி கூறியதாவது: தேசிய மக்கள் பதிவேடு என்பது மிகவும் ஆபத்தான விளையாட்டு. இது தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்துவதற்கான முன்னோடியாகும்.
தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆபத்தான விளையாட்டு: மாநில முதல்வர்களுக்கு மம்தா எச்சரிக்கை
- தேசிய மக்கள் தொகை பதிவு
- மம்தா மாநில முதல்வர்களுக்கு தேசிய மக்கள் தொகை பதிவு எச்சரிக்கிறார்
- மம்தா மாநில முதல்வர்களுக்கு எச்சரிக்கிறார்