சென்னை: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் கட்டிடங்கள், மனைகளுக்கு வாடகை குறைவாக இருப்பதாக கூறி கடந்த 2016ல் புதிதாக வாடகை நிர்ணயம் செய்யப்பட்டது. அப்போது அரசாணையின் படி வழிகாட்டி மதிப்பை அடிப்படையாக வைத்து வாடகை நிர்ணயிக்கப்பட்டது. மேலும், ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை 15 சதவீதம் வாடகை உயர்த்தப்படும் என்று அந்த அரசாணையில் கூறப்பட்டது. அதன்படி கடந்த 2019ல் மீண்டும் வாடகை கட்டணத்தை உயர்த்த வேண்டும். ஆனால், கடந்த 2017ல் வழிகாட்டி மதிப்பு 30 சதவீதம் குறைக்கப்பட்டது. இதையடுத்து வாடகையையும் குறைத்து இருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை.