பழநி: பழநியில் செல்போன் பார்த்தபடியே பஸ் ஓட்டும் தனியார் பஸ் டிரைவரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநியில் இருந்து திண்டுக்கல் செல்லும் தனியார் பஸ்சின் டிரைவராக இருப்பவர் ராமகிருஷ்ணன். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு, செல்போனை பார்த்தபடியே 15 நிமிடங்களுக்கும் மேலாக பஸ்சை ஓட்டியதாக கூறப்படுகிறது. பஸ்சில் இருந்த பயணிகள் அவரை கண்டித்துள்ளனர். ஆனாலும், தொடர்ந்து செல்போனை பார்த்துக்கொண்டே பஸ்சை, வேகமாக ஓட்டியதாகவும் தெரிகிறது. இதனால் பயணிகள் அச்சமடைந்தனர். அப்போது பஸ்சில் இருந்த ஒரு பயணி, டிரைவரின் இச்செயலை தனது செல்போனில் பதிவு செய்துள்ளார்.