களியக்காவிளையில் சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி

கன்னியாகுமரி : குமரி மாவட்டம் களியக்காவிளையில் சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் குடும்பத்தினருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்த ரூ.5 லட்சம் அவரது மனைவி ஏஞ்சல் மேரியிடம் வழங்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே கடந்த ஜனவரி 8ம் தேதி சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டும், தாக்கியும் கொலை செய்தனர்.இந்த கொலை வழக்கில் கைதான தவுபிக், சமீம் மீது உபா சட்டம் போடப்பட்டுள்ளது.

Related Stories: