டெல்லி : திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திருவள்ளுவர் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். காவி உடையுடன் இருக்கும் வள்ளுவர் படத்தை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். அவர் பதிவில் தமிழ் கவிஞர், தத்துவஞானி, துறவி என திருவள்ளுவரை புகழ்ந்த வெங்கையா நாயுடு, திருக்குறள் மூலம் அறத்தின்படி எப்படி வாழ்வது என வழிகாட்டியவர் திருவள்ளுவர் எனவும் ஆங்கிலத்தில் புகழாரம் சூட்டினார். மேலும் அந்த பதிவிற்கு காவி உடையுடன் இருக்கும் வள்ளுவர் படத்தை பகிர்ந்திருந்தார்.