சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு துணை ஆணையர் நிலையிலான அதிகாரிகள் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும். ஆனால் சென்னை மண்டல நகை சரிபார்ப்பு உதவி ஆணையர் ஜோதி லட்சுமி விதிமுறைகளை மீறி நியமிக்கப்பட்டுள்ளார். அதன்பேரில் கடந்த ஜூன் மாதம் ஜோதிலட்சுமி பணி இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால், ஒரு சில நாட்களிலேயே அந்த பணியிட மாற்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டு, மீண்டும் அதே இடத்திற்கு பணியில் சேர்ந்தார். இந்நிலையில் கந்தகோட்டம் முருகன் கோயிலில் 10 வெள்ளி காசுகளை திருப்பி தராமல் இழுத்தடித்து வந்ததாக கூறி அவருக்கு ஓராண்டு பதவி உயர்வு பெற தடை விதித்து கமிஷனர் உத்தரவிட்டார். அதேபோன்று, ரூ.36 லட்சம் உண்டியல் பணத்தை மாற்றாத காரணத்துக்காகவும் அவர் மீது 17 பி பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.