சென்னை: லாரி விபத்தில் உயிரிழந்த கட்டுமான நிறுவன மேலாளரின் குடும்பத்தினருக்கு 1 கோடியே 81 லட்சம் இழப்பீடு வழங்க மோட்டர் வாகன விபத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்தவர் சவுந்தரராஜன். பிரபல கட்டுமான நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வந்தார். இவர், கடந்த 2013ம் ஆண்டு காஷ்மிரில் அணைகட்டும் வேலையில் ஈடுபட்டிருந்தபோது, லாரி ஒன்று சாலை விதிமீறி கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்துள்ளது.
அந்த லாரி திடீரென சவுந்தரராஜன் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை தொடர்ந்து, சென்னை மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் சவுந்தரராஜனின் மனைவி புஷ்பலதா, மகன்கள் ராஜ் தீபக், ராஜ் திலீப் ஆகியோர் ₹1 கோடியே 20 லட்சம் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தனர்.