திருவொற்றியூர்: புதுவண்ணாரப்பேட்டை காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் சங்கர். ராயபுரம் போக்குவரத்து காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் நிதிஷ்குமார் (21). அம்பத்தூரில் உள்ள தனியார் ஐடி கம்பெனியில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு பணி முடிந்து நிதிஷ்குமார் மற்றும் சக அலுவலர்கள் யாசர் அராபத் (21), சிவா (21) ஆகியோர் ஒரே பைக்கில் மாதவரம் நெடுஞ்சாலை வழியாக வீட்டுக்கு புறப்பட்டனர்.
மாதவரம் கனகசத்திரம் அருகே வந்தபோது, இடது புறத்திலிருந்து திரும்பிய டிப்பர் லாரி திடீரென பைக் மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய 3 பேரும் பைக்குடன் கீழே விழுந்தனர்.