புதுடெல்லி: ரத்தன் டாடா மீது தொடர்ந்த அனைத்து அவதூறு வழக்குகளையும் பாம்பே டையிங் நிறுவனத் தலைவர் நஸ்லி வாடியா திரும்ப பெற்று கொண்டுள்ளார். டாடா குழும நிறுவனத்தின் இயக்குநர் பதவியில் இருந்து பாம்பே டையிங் நிறுவனத் தலைவர் நஸ்லி வாடியா கடந்த 2016ல் வெளியேற்றப்பட்டார். இதனால், ரத்தன் டாடா, இயக்குனர்கள் அஜய் பிரமல் உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக அவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் ரூ.3,000 கோடி இழப்பீடு கோரி அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், `நஸ்லி வாடியாவை நீக்குவது தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானம் என்பது அவதூறு ஆகாது’ என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பினை எதிர்த்து வாடியா உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மனு தாக்கல் செய்தார்.