டெல்லி: ஜிஎஸ்டி வரியை திரும்ப பெறுவதில் 931 நிறுவனங்கள் மோசடி செய்ததாக மத்திய நிதியமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 931 நிறுவனங்கள் மோசடி கணக்குகளை தாக்கல் செய்து, ரிபண்டு கோரியது கண்டறியப்பட்டதாக, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு நடைமுறையை ஏற்படுத்தும் நோக்கத்தில் புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) 2017-ம் ஆண்டின் ஜூலை மாதம் 1-ம் தேதி மத்திய மோடி அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, அனைத்துப் பொருட்கள், சேவைகளுக்கும் ஒரே விதமான வரி முறை அமலுக்கு வந்தது.