குமாரபாளையம்: குமாரபாளையம் அரசு ஆண்கள் மேநிலைப்பள்ளியில், வனம் செய்வோம் அமைப்பும்,தேசிய பசுமைப்படையும் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு விதைப்பந்து தயாரிக்கும் பயிற்சியை வழங்கியது. விதைகளே பேராயுதம் என்ற தலைப்பில் மாணவர்களுக்கு சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து விளக்கப்பட்டது. இப்பயிற்சியில் மாணவர்கள் 1301 விதைப்பந்துகளை தயாரித்தனர்.