குமாரபாளையம்: குமாரபாளையம் நகராட்சி 20 மற்றும் 24வது வார்டுகளின் குடிநீர் சந்திப்பு குழாய்களுக்கான புதிய சிலாப் போடப்பட்டது. இந்த சிலாப் தரமானது இல்லை என அப்பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவித்தனர். ஆனால், நகராட்சி நிர்வாகத்தினர் போட்டு விட்டு சென்ற சிலாப், அதே நாளில் வாகனத்தின் எடை தாங்காமல் உடைந்து விழுந்தது. இதையடுத்து அங்கு வந்த முன்னாள் நகர மன்ற தலைவர் சேகர், திமுக நிர்வாகிகள் தரமற்ற பணி குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.