நல்லம்பள்ளி: நல்லம்பள்ளி அருகே கோவிலூர் ஏரியில் குப்பைகளை கொட்டுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நல்லம்பள்ளி அடுத்துள்ள கோவிலூர் பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சேகரமாகும் குப்பைகளை, துப்புரவு தொழிலாளர்கள் எடுத்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தரம் பிரித்து வந்தனர். இந்நிலையில், திடக்கழிவு திட்ட பணி செயல்படாததால் குப்பைகளை சேகரிப்பதை துப்புரவு பணியாளர்கள் நிறுத்தி விட்டனர்.