சின்னமனூர்: திமுகவிலிருந்து அதிமுகவிற்கு மாறிய கவுன்சிலர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று சின்னமனூரில் கிராம மக்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம், சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் 10 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் திமுகவில் 6 பேரும், அதிமுகவில் 4 பேரும் இருந்தனர். திடீரென 1வது வார்டு திமுக உறுப்பினர் ஜெயந்தி சிவக்குமார் அதிமுகவில் இணைந்தார். நேற்றுமுன்தினம் நடந்த மறைமுக தேர்தலில் திமுக உறுப்பினர்கள் 5 பேர் மட்டும் கலந்துகொண்டனர். ஆனால், அதிமுகவினர் யாரும் கலந்து கொள்ளவில்லை. இதனால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.