பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு தீவிரவாதிகளின் பயிற்சி கூடாரமாக தமிழகம் மாறிவிட்டது

அரியலூர்: தமிழகம் தீவிரவாதிகளின் பயிற்சி கூடாரமாக மாறிவிட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். அரியலூரில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:

உள்ளாட்சி தேர்தலில் சில இடங்களில் பாஜ தனித்து போட்டியிட்டு சில இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. வருங்காலங்களில் கூட்டணியாக செயல்பட முயற்சிகள் மேற்கொள்ளப்படும். முஸ்லிம் தீவிரவாதிகளால் காவல் உதவிஆய்வாளர் கொல்லப்பட்டது குறித்து சட்டமன்றத்தில் யாரும் விவாதிக்கவில்லை. இதுதொடர்பாக அதிமுக, திமுக கட்சிகள் கண்டனம்கூட தெரிவிக்கவில்லை. சிறுபான்மையினர் வாக்குக்காக கட்சிகள் அரசியல் செய்கின்றன.

தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்திலிருந்தே நான் இதனை கூறி வருகிறேன். தற்போது கேரளா, குஜராத், டெல்லி, தமிழகம் உள்ளிட்ட பல இடங்களில் தமிழகத்தை சார்ந்த முஸ்லிம் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளது இதை உறுதிப்படுத்தியுள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: