கொல்கத்தா: பிரதமர் மோடி இருநாள் பயணமாக மேற்கு வங்காளம் மாநில தலைநகரம் கொல்கத்தாவுக்கு நேற்று மாலை சென்றார். கொல்கத்தா துறைமுகத்தின் 150-வது ஆண்டுவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். கொல்கத்தா சென்ற பிரதமர் மோடி ராஜ்பவனில் தங்கியுள்ளார். இதற்கிடையே, ராஜ்பவனில் தங்கிய பிரதமர் மோடியை அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று மாலை சந்தித்துப் பேசினார். பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று மேற்கு வங்கம் சென்றார். கொல்கத்தா துறைமுக கழகத்தின் 150வது ஆண்டு நிறைவு விழா, நேதாஜி உள்நாட்டு விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது.