கோபி: கோபி அருகே உள்ள மொடச்சூரில் பூங்காவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி கற்பதற்காக க்யூ.ஆர்.கோடு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. க்யூ.ஆர்.கோடை பயன்படுத்தி மாணவர்கள் எங்கிருந்தாலும் ஆடியோ, வீடியோ முறையில் கல்வி கற்க முடியும். விளையாடிக்கொண்டும், படுத்து தூங்கிக்கொண்டும் கூட கல்வி கற்க முடியும் என்றார். தூங்கிக்கொண்டே படிக்க முடியும் என்ற அமைச்சர் பேச்சால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அதைத்தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: பள்ளிகளில் காலை உணவு வழங்குவதில் பல்வேறு நடைமுறை சிக்கல் உள்ளது.