சென்னை: தமிழகத்தில் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சிக்கான தேர்தல் இரண்டு கட்டமாக நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி, ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த கடலூர் மாவட்டம் சத்தியவாடி பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்ட செங்கல்வராயன் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதேபோல், 50க்கும் மேற்பட்ட வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.