மஞ்சூர்: மஞ்சூர் அருகே பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்த 25க்கும் மேற்பட்ட குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். மஞ்சூர் அருகே உள்ள தொட்டகம்பை பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் தேயிலை விவசாயத்துடன் பட்டானி, பீன்ஸ், அவரை, உருளைக்கிழங்கு, கேரட் உள்ளிட்ட பல வகையிலான மலை காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இங்கு கடந்த சில மாதங்களாக 100க்கும் மேற்பட்ட குரங்குகள் முற்றுகையிட்டு பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்தன. விவசாய விளை நிலங்களில் புகுந்து பயிர் செடிகளை பிடுங்கி நாசம் செய்வதுடன் திறந்து கிடக்கும் வீடுகளில் புகுந்து தின்பண்டங்களை தூக்கி செல்வதும், பொருட்களை வாரியிறைப்பதும் வாடிக்கையாக உள்ளது.