வாஷிங்டன்: ஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்தும் விவகாரத்தில் டிரம்பின் அதிகாரத்தை கட்டுப்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிரான தீர்மானம் அமெரிக்க பிரிதிநிதிகள் சபையில் நிறைவேறியது. தீர்மானத்திற்கு ஆதரவாக 224 வாக்குகளும், எதிராக 194 வாக்குகளும் போடப்பட்ட நிலையில் 13 பேர் தீர்மானத்தை புறக்கணித்துள்ளனர். ஈராக் தலைநகர் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க படையினரின் ஆளில்லா விமான தாக்குதலில் ஈரான் நாட்டை சேர்ந்த புரட்சிகர பாதுகாப்பு படை தலைவர் சுலைமானி கொல்லப்பட்டார். இதனால், அமெரிக்கா- ஈரான் இடையே போர் மூளும் அபாயம் நிலவி வருகிறது. சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக நேற்று முன்தினம் அதிகாலை ஈராக்கில் உள்ள 2 அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
ஈரான் மீது ராணுவ தாக்குதல்; அதிபர் டிரம்புக்கு எதிராக அமெரிக்க பிரிதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்
- எங்களுக்கு
- இராணுவ தாக்குதல்
- ஈரான்
- பிரதிநிதிகள் சபை
- ஜனாதிபதி
- டிரம்ப் ஈரான்
- ஏவுகணை தாக்குதல்
- ஈராக்
- தீர்மானம்
- டொனால்டு டிரம்ப்