இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தனே ஜெய்சங்கருடன் பேச்சு

புதுடெல்லி: மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தனே டெல்லியில் நேற்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.  இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையில் புதிய ஆட்சி அமைந்துள்ளது. இந்நிலையில், அவரது அரசில் வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ள தினேஷ் குணவர்த்தனே முதல் முறையாக இந்தியா வந்துள்ளார்.

3 நாள் பயணமாக வந்த அவருக்கு நேற்று முன்தினம் இரவு டெல்லியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று அவர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். அப்போது வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவற்றில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. இருநாட்டு அமைச்சர்களும் பரஸ்பர உறவில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: