கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கொல்லப்பட்ட இடத்தில் தமிழக டிஜிபி திரிபாதி ஆய்வு செய்தார். நேற்று களியக்காவிளை சோதனை சாவடியில் உதவி காவல் ஆய்வாளர் வில்சன் மர்மநபர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் காவல்துறை மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல் உதவி ஆய்வாளர் வில்சனை சுட்டுக்கொன்ற கொலையாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை தமிழக டி.ஜி.பி. திரிபாதி திருவனந்தபுரம் சென்றார். அங்கு கேரள போலீஸ் டி.ஜி.பி.லோக்நாத் பெக்ராவை சந்தித்து பேசினார். இருவரும் திருவனந்தபுரத்தில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். 2 பயங்கரவாதிகளின் படங்கள் கேரளாவில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தற்போது கொலை செய்யப்பட்ட இடத்தில் தமிழக டிஜிபி திரிபாதி ஆய்வு நடத்தினார்.
குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் எஸ்.ஐ. வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட பகுதியில் தமிழக டிஜிபி திரிபாதி நேரில் ஆய்வு
- எஸ்ஐ
- சோதனைச்சாவடி
- மாவட்டம்
- Kaliyakavil
- படப்பிடிப்பு
- குமாரி
- டிஜிபி திரிபாதி
- வில்சன்
- காளியகவில்லை சோதனைச் சாவடி
- டிஜிபி திரிபாதி ஆய்வு
- கன்னியாகுமரி மாவட்டம்
- தமிழ்நாடு