மதுரை: சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், சங்கராபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு, 2 பேர் வெற்றி பெற்றதாக சான்றிதழ் வழங்கப்பட்டது. இதையடுத்து முதலில் வெற்றி பெற்றதாக சான்றிதழ் வழங்கப்பட்ட தேவி, ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம், 2வதாக வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்ட பிரியதர்சினி, நாளை (ஜன.10) வரைபதவியேற்க தடை விதித்தது. இந்த மனு நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில். ‘‘ஒருவர் வெற்றி பெற்றதாக சான்றிதழ் வழங்கிய பிறகு அதை ரத்து செய்து, வேறொருவருக்கு சான்றிதழ் வழங்க தேர்தல் அதிகாரிக்கு அதிகாரம் இல்லை.