சோமாலியா: சோமாலியாவில் பாராளுமன்றம் அருகே இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. சோமாலியாவில் அல்கொய்தா இயக்கத்துடன் தொடர்புடைய அல் ஷபாப் பயங்கரவாத இயக்கம், அரசை கவிழ்க்கும் முயற்சியாக, தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் பாதுகாப்பு படையினர் மற்றும் அப்பாவி மக்கள் பலியாகின்றனர். அவ்வகையில், தலைநகர் மொகடிஷூவில் உள்ள பாராளுமன்றம் அருகே அல் ஷபாப் பயங்கரவாத இயக்கம் இன்று தற்கொலைத் தாக்குதலை நடத்தி உள்ளது. பாராளுமன்றம் அருகே உள்ள சோதனைச் சாவடியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டன.