முன்னாள் படை வீரர்கள் தினம் தாம்பரத்தில் 14ம் தேதி பேரணி

சென்னை : இந்தய ராணுவத்தில் பணியாற்றிய ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மதிப்பு அளிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14ம் தேதி முன்னாள் படை வீரர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு வரும் 14ம் தேதி தாம்பரம் விமானப்படை தளம் சார்பில் முன்னாள் படை வீரர் நாள் பேரணி நடைபெறவுள்ளது. இந்த பேரணியில் முன்னாள் படை வீரர்கள் மூப்படைகளைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொள்ள வேண்டும் என்று இந்திய ராணுவத்தில் செய்தி தொடர்பு துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: