சென்னை: ரூபாய் 132 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் 36 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 50 காவல்துறை குடியிருப்புகள் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கான குடியிருப்பு உள்ளிட்ட கட்டிடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதையடுத்து, பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், அமராவதி நகரில் 9 கோடியே 87 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டடப்பட்டுள்ள பள்ளி கட்டடங்களையும், சைனிக் இளநிலை மாணவர்கள் விடுதிக் கட்டடத்தை காணொலிக் காட்சி மூலமாகத் முதலமைச்சர் எடப்பாடி திறந்து வைத்தார்.