ஜெய்ப்பூர்: ராஜஸ்தான், குஜராத்தில் பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு எண்ணிக்கை 600ஐ தாண்டியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகள் சமீப காலமாக தொடர்ந்து உயிரிழப்பது அதிகரித்துள்ளது. குறிப்பாக கோட்டாவில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளது. குழந்தை பிறக்கும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்தின்மை, குறை பிரசவம், சரியான கவனிப்பின்மை உள்ளிட்ட காரணங்களே பச்சிளம் குழந்தைகளின் இறப்பிற்கு காரணம் என கூறப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் உள்ள கே.கே.லான் மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுமார் 100 குழந்தைகள் நிமோனியா, ரத்தத்தில் தொற்று உள்ளிட்ட பாதிப்புகளால் இறந்துவிட்டன.