பெரம்பலூர்: பெரம்பலூர் அருகில் வாலிகண்டபுரத்தில் நெடுஞ்சாலை ரோந்து பணியின் வாகனத்தில் அரசு பேருந்து மோதியதில் எஸ்.ஐ ரகுபதி மற்றும் டிரைவர் ராமராஜ் காயம் அடைந்துள்ளனர். பாண்டியிலிருந்து திருச்சி சென்ற அரசு பஸ் மோதியதில் காயம் அடைந்த காவலர்கள் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.