ஊட்டி: ஊட்டி - குன்னூர் சாலையில் தலையாட்டிமந்து முதல் ஆவின் வரை சாலையின் இருபுறமும் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஊட்டியில் - குன்னூர் நெடுஞ்சாலையில் தலையாட்டிமந்து பகுதி உள்ளது. இந்த நெடுஞ்சாலை நீலகிரி மாவட்டத்தை மற்ற சமவெளி பகுதி மாவட்டங்களை இணைப்பதால் இந்த சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருகின்றன.இதனால் இந்த சாலை எப்போழுதும் வாகனங்களால் பிஸியாக காணப்படும். இந்த சாலையில் எப்போதும் ஈரம் இருந்து கொண்டிப்பதால் சாலை எத்தனை முறை அமைத்தாலும் சேதமடைந்து வந்தது. இதை கருத்தில் கொண்டு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தலையாட்டிமந்து பகுதியில் இருந்து ஆவின் பகுதி வரை இன்டர்லாக் கற்கள் கொண்டு சாலை அமைக்கப்பட்டது. இதனால் சாலை அகலமானது. இந்த சாலையில் இடையூறின்றி வாகனங்கள் சென்று வந்தன.
