சென்னை: அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து கூறி ஆளுநர் உரையை தொடங்கினார். எனது உரையை தொடர்ந்து அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கலாம். பிரச்சனைகள் குறித்து விவாதிக்க சட்டப்பேரவையை பயன்படுத்துங்கள். நிர்வாகத்திறனில் தமிழகம் முதலிடம் பிடித்து சாதனை படைத்ததற்கு முதல்வருக்கு எனது வாழ்த்துக்கள். ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு தடைகளை கடந்து ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.