டெல்லி ஜே.என்.யூ. மாணவர்கள் மீதான தாக்குதல்: தஞ்சையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்...பல்கலை. துணை வேந்தர் பதவி விலக அறிக்கை

டெல்லி: டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலை(ஜேஎன்யு) கழகத்தில் விடுதி கட்டணங்களை உயர்த்தியதோடு, புதிய வரைவு கொள்கைகள் கொண்டு வரப்பட்டது. இதற்கு மாணவர்கள் இடையே கடும் எதிர்ப்பு எழுந்து தொடர் போராட்டங்கள் நடந்தன. இதனிடையே, நேற்று முன்தினம் ஜேஎன்யு பல்கலை வளாகத்தில் உள்ள கம்பியூட்டர் சர்வர் அறை சூறையாடப்பட்டது. இந்த விவகாரத்தில் மாணவர்கள் யூனியன் மற்றும் பல்கலை நிர்வாகம் இடையே பரஸ்பரம் குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில், பேராசிரியர்கள் சங்கம் சார்பில் நேற்று பல்கலை வளாகத்தில் பொதுகூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது திடீரென கலவரம் வெடித்தது. இடதுசாரி மாணவர்கள் அமைப்பை சேர்ந்தவர்களும், ஏபிவிபி அமைப்பு மாணவர்களும் மோதிக்கொண்டனர். ஏபிவிபி மாணவர்கள் கற்களை கொண்டு தாக்கியதில் பல்கலை மாணவர் சங்க தலைவர் அசி கோஷின் மண்டை உடைந்தது. இதில் அவர் ரத்தம் சொட்ட சொட்ட சக மாணவர்களால் அழைத்து செல்லப்பட்டார். மேலும், தடி, இரும்பு கம்பிகள் மற்றும் சுத்தியலுடன் பல்கலை வளாகத்தை சுற்றிலும் நின்றுக்கொண்டு முகமூடி அணிந்த மர்மநபர்கள் கற்களை கொண்டு தாக்கினர். அதுமட்டுமின்றி ஹாஸ்டலுக்குள் நுழைந்து அங்கிருந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஏபிவிபி அமைப்பினர் குற்றஞ்சாட்டினர்.

இதற்கிடையே, பல்கலை நிர்வாகத்தின் அழைப்பின்பேரில் போலீசார் நேற்றிரவு பல்கலையில் நுழைந்தனர். அவர்கள் வன்முறையில் ஈடுபட்ட மாணவர்களை பிடித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழகத்தின் நிலவரம் தொடர்பாக அதன் பதிவாளர் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்கவும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே, டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குள் மூகமுடி கும்பல் தாக்குதல் எதிரொலியாக நாடு முழுவதும் முக்கிய இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். மும்பையில் கேட்வே ஆஃப் இந்தியா முன்பு நள்ளிரவில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்க்ள தர்ணாவில் ஈடுபட்டனர். பாசிச நடவடிக்கையால் மாணவர்களை ஊடுக்க முடியாது என்று முழக்கமிட்டனர். இதைபோல், கொல்கத்தா, புனே திரைப்பட கல்லூரி, ஐதராபாத், அலிகார் உள்ளிட்ட நாட்டின் பிறப்பகுதிகளிலும் நள்ளிரவில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 புதுச்சேரியிலும் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக துணை வேந்தர் பதவி விலக வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அறிக்கையில் நேற்று இரவு பல்கலைக்கழக வளாகத்தில் வன்முறை நடந்ததற்கு பல்கலை.துணை வேந்தரே காரணம் என்றும் மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Related Stories: