சித்தூர்: சித்தூர் எம்எஸ்ஆர் சர்க்கிள் அருகே உள்ள உழவர் சந்தையில் நபர் ஒருவருக்கு ஒரு கிலோ வெங்காயம் ₹25 க்கு நேற்று வழங்கப்பட்டது. உழவர் சந்தையில் கூட்டநெரிசல் அதிகமானதால் போலீசார் காலை 4 மணி முதல் காலை 11 மணி வரை பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். உழவர் சந்தையில் போதிய இடவசதி இல்லாததால் கூட்ட நெரிசல் அதிகமாகியதாலும், போக்குவரத்து இடையூறு ஏற்படும் காரணமாகவும், சித்தூர் மாங்காய் மார்க்கெட் பகுதிக்கு வெங்காய விற்பனை மாற்றப்பட்டது.
அங்கு பொதுமக்களுக்கு 5 கவுண்டர்கள் அமைத்து அதன் மூலம் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டது.