சென்னை: புதுச்சேரி டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் எத்தனை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன என்பது குறித்து கல்லூரி முதல்வர் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் புதுச்சேரி காலாப்பட்டுவில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் 5 ஆண்டு எல்எல்பி படிக்கும் மாணவரின் தந்தை வக்கீல் சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: இந்த கல்லூரிகளில் கவுரவ ஆசிரியர்களை வைத்து பாடம் நடத்துகிறார்கள். திறமையான ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள் செமஸ்டர் தேர்வுக்கு தயாராக முடியாத நிலையில் உள்ளனர். மாணவர்களின் எதிர்காலமும் பாதிக்கப்பட்டுள்ளது.