திருவொற்றியூர்: திருவொற்றியூர் எண்ணூர் விரைவு சாலையில் எரிவாயு தகன மேடை அருகே சர்வீஸ் சாலையில் கனரக லாரிகள் நிறுத்தப்படுவதால், இறந்தவர்களின் சடலத்தை சுமந்து வரும் பொதுமக்கள் விபத்துக்குள்ளாகின்றனர் திருவொற்றியூர் எண்ணூர் விரைவுச்சாலை, பட்டினத்தார் கோயில் தெரு அருகே நவீன எரிவாயு தகன மேடை உள்ளது. கடந்த 2011ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது கே.பி.பி.சாமி எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ₹55 லட்சத்தில் நவீன வசதிகளுடன் இந்த தகன மேடை கட்டப்பட்டது. தற்போது மாநகராட்சி இந்த நவீன எரிவாயு தகன ேமடையை பராமரித்து வருகிறது. இந்நிலையில் இந்த எரிவாயு தகன மேடையை ஒட்டியுள்ள சர்வீஸ் சாலையில் துறைமுகத்துக்கு செல்ல வேண்டிய கனரக லாரிகள் வரிசையாக நிறுத்தப்படுகிறது. இதனால் இறந்தவர்களின் உடலை சுமந்து வரும் உறவினர்கள் எளிதாக தகன மேடைக்கு செல்ல முடியாமல் சிரமத்துக்குள்ளாகின்றனர்.