2016ல் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் நிராகரிக்கப்பட்ட தபால் வாக்குகளுடன் ஆஜராக தேர்தல் அதிகாரிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: 2016ல் திருமாவளவன் போட்டியிட்ட காட்டுமன்னார்கோயில் தொகுதியில் நிராகரிக்கப்பட்ட 102 தபால் வாக்குகளுடன் ஜன.20ம் தேதி நேரில் ஆஜராக தொகுதி தேர்தல் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக எம்.எல்.ஏ.முருகுமாறனின் வெற்றியை எதிர்த்து திருமாவளவன் தொடர்ந்த தேர்தல் வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கில் தீர்ப்பளிக்கும் முன் நிராகரிக்கப்பட்ட தபால் வாக்குகளை ஆராய வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

Related Stories: