பெகுசராய்: ‘‘வெளிநாட்டுக்கு சென்றதும், இந்திய மாணவர்கள் மாட்டிறைச்சி சாப்பிட தொடங்குகிறார்கள். இதற்கு காரணம், பெற்றோர்கள் நம் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தின் மதிப்பையும் கற்றுத் தராததுதான்,’’ என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கவலை தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம், பெகுசராயில் நேற்று நடந்த ‘பகவத் கதா கயாபன்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பேசியதாவது: மிஷனரி (கிறிஸ்தவ) பள்ளிகளுக்கு நாம் பிள்ளைகளை படிக்க அனுப்புகிறோம். பின்னர், ஐஐடி மூலமாக இன்ஜினியராகி, அவர்கள் வெளிநாடு செல்கிறார்கள். அங்கு சென்றதுமே மாட்டிறைச்சி சாப்பிடத் தொடங்குகிறார்கள். ஏன்? ஏனெனில்., நாம் அவர்களுக்கு நமது கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் மதிப்பையும் கற்றுத் தருவதில்லை.