முதியவருக்கு கத்திக்குத்து

பெரம்பூர்: சென்னை மகாகவி பாரதிநகர், 11வது கிழக்கு குறுக்கு தெருவை சேர்ந்தவர் செபாஸ்டீன் (65). கூலி தொழிலாளி. இவரது நண்பர் அன்வர். நேற்று முன்தினம் இருவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் அன்வர், செபாஸ்டீனை கத்தியால் சரமாரி குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். படுகாயமடைந்த செபாஸ்டீனுக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து மகாகவி பாரதிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து அன்வரை தேடி வருகின்றனர்.

Related Stories: