ஆம்பூர்: ஆம்பூர் அரசு மருத்துவமனையில் நாய்க்கடிக்கு சிகிச்சை பெற வந்த மாணவனை ஊசி வாங்கிவரச் சொல்லி அலைக்கழித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வளையல்கார தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவர் அதே பகுதியில் இஸ்திரி கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ராகுல்(11), 6ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் சுமார் 2 மணியளவில் ராகுல் தனது வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த வெறிநாய் ஒன்று ராகுலை விரட்டி கை, விரல்கள் மற்றும் முகத்தில் கடித்தது.
ஆம்பூர் அரசு மருத்துவமனையின் அவலம் நாய்க்கடி சிகிச்சைக்கு வந்த மாணவனை ஊசி வாங்கி வரச்சொல்லி அலைக்கழிப்பு: சமூக வலைதளத்தில் வைரலான வீடியோ
- அம்பூர் அரசு மருத்துவமனை நோய்வாய்ப்பட்ட மாணவர் புற்றுநோய் சிகிச்சை: ஒரு வைரல் வீடியோ அம்புர்
- ஆலம்
- அரசாங்க மருத்துவமனை