ஜம்மு: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தீவிரவாத ஊடுருவலைத் தடுக்க முயன்ற போது நடந்த துப்பாக்கி சூட்டில் பாதுகாப்பு படையை சேர்ந்த இரண்டு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ஜம்மு காஷ்மீர் ரஜோவுரி மாவட்டத்தின் நவ்ஷெரா பகுதியில் உள்ள காரி திரயாத் வனப்பகுதி வழியாக நேற்று அதிகாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, அங்கு ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.