கரூரில் இருந்து நாகர்கோவிலுக்கு ஆழ்துளை மரணத்தை தடுக்க எஸ்ஐ பைக் பிரசார பயணம்

நாகர்கோவில்: கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற எஸ்ஐ சிவாஜி(64). இவர் தற்போது ஆழ்துளை கிணறு மரணத்தை தடுத்திடும் வகையில் தமிழகம் முழுவதும் பைக்கில் பிரசாரம் பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கான பயணத்தை கடந்த 25ம்தேதி கரூரில் இருந்து தொடங்கினார். தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் நேற்று இரவு நாகர்கோவில் வந்து சேர்ந்தார். இன்று காலை அவர் கோட்டார் சந்திப்பில் இருந்து மீண்டும் பிரசாரத்தை தொடங்கினார்.

இதுகுறித்து எஸ்ஐ சிவாஜி கூறியதாவது: ஆழ்துளை கிணற்றில் விழுந்து சமீபத்தில் சுஜீத் என்ற சிறுவன் பரிதாபமாக பலியானான். இந்த சம்பவத்தை டிவியில் பார்த்து நான் மிகவும் மனவேதனை அடைந்தேன்.  இதுதொடர்பான மரணத்தை தடுக்கும் வகையில் பிரசாரம் செய்ய முடிவு செய்ய திட்டமிட்டேன். அதன்படி தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறேன். ஆழ்துளை கிணறு மூடப்படாமல் கிடந்தால் பொதுமக்கள் 1077 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். வரும் 10ம் தேதி எனது பயணத்தை கரூரில் நிறைவு செய்கிறேன் என்றார்.

Related Stories: